Pages

Thursday, September 20, 2012

என் எண்ணச் சிதறல்கள் ....

என் காதலானவளே ...

நகமும் சதையுமாய்
இணைந்திருந்த நம் உறவு
இப்போதெல்லாம்
இலைமேல் நீர் துளியாய்
ஒட்டியும் ஒட்டாமலும் ..

பிரிவு
உன்னால் உன்டானதென்
நானும்
என்னால் உன்டானதென
நீயும்
எண்ணி எண்ணியே
தொலைத்துவிட்டோம்
நம் பிரியமான காதலை


பிரிவுக்கு
உன்மேல் பழி சொல்ல நானும்
என் மேல் பழி  சொல்ல நீயும்
நம் மேல் பழி சொல்ல நம் காதலும்
காத்திருகிறது ..

பிரிவின் வலி அறிந்திருப்போம்
இருவரும்
இனியாவது பிரியாமல்
வாழ்ந்திருப்போம்  வா


பேசிப் பேசித்தான்  இருவரும்
காதல் கொண்டோம்
வா மீண்டும் பேசி பேசியே
பிரிவை "கொல்வோம்" வா

சண்டையிட்டது யார் உன்
பிரியமானவன் தானே என்று
நீயும்

சண்டையிட்டது யார் என்
பிடித்தமானவள்  தானே என்று
நானும்
சமரசம் செய்து கொள்வோம் வா ..


மௌனம் என்ற ஆடை போர்த்தி
இன்னும் எத்தனை நாளைக்குதான்
உன் செவ்விதழை மூடி வைப்பாய்
என்னை திட்டவாவது
உன் மௌனம் கலைத்துவிடு  அன்பே

வா பிரிந்து இருந்த காலத்திற்கும்
சேர்த்து காதல் செய்வோம்
வா ...வா .....

கிறுக்கல்கள் .....
சசி எம் குமார் .......

Tuesday, September 18, 2012

தமிழ் கூறும் பதிவுலகிற்கு ....


பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் ...

எனக்கு நெடு நாள் ஏக்கம் உங்களை போல் நானும் பதிவுகள் இட ..
என்னையும் உங்களோடு இணைத்து கொள்ள ..
என்னையும் வரவேற்கும் அனைவருக்கும் என் முதற்கன் வணக்கம் ...
நேசமுடன் கை கோர்த்து கொள்கிறேன் உங்களுடன் நான் .....

என்றும் அன்புடன் 

சசி மோகன் குமார் ....