Pages

Thursday, September 5, 2013

ஓ நண்பனே ......

அன்பின் நண்பர் திரு .கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு ......

   தங்கள் நண்பன் என்ற முறையில் இணையத்தில் இவ்விரண்டு நாட்களாக நடந்து வரும் தங்களின் பதிவின் பொருட்டு ஏற்பட்டுள்ள ஒரு சிறு சச்ச்சரவின் பால் எனது பதிவினை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்

முதலில் ஒரு விசயத்தை எனக்கு கூறுங்கள் நீங்கள் பதிவிட்டுள்ள  இந்த பதிவானது முற்றிலும் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தானே எழுதி உள்ளீர்கள்? இப்படிதான் எழுத வேண்டுமென்று பதிவர் சந்திப்பின் அரங்கத்திலேயே முடிவு செய்து விட்டீர்களா ? முற்றிலும் குறை சொல்ல வேண்டுமென்றே எழுதப்பட்ட பதிவாகத்தான் தோன்றுகிறது பதிவர் சந்திப்பு தோல்வியில் முடிந்தது போலொரு பிம்பத்தை தோற்றுவிக்க நினைக்கிறீர்களா? வெற்றி தோல்வி என அறிவிக்க இது எக்ஸ்சாமோ எலக்சனோ , அல்ல உண்மையில் சொல்ல போனால் உலகெங்கிலும் உள்ள பதிவர்களை ஒன்றிணைத்து அவர்களோடு அளவளாவி ஒருவருக்கொருவர் தம்மை அறிமுகம் செய்துகொண்டு நம் சந்திப்பை அர்த்தப்படுத்தி மனதில் அழகான நினைவலைகளை தேக்கிவைத்து கொள்ளவே இச்சந்திப்பு

உங்கள் பார்வையில் பதிவர் சந்திப்பை பற்றி எழுதி உள்ளீர்கள் ...சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு பார்வையில் கொஞ்சம் குறை உள்ளது விரைவில் வாசன் ஐ கேரை தொடர்புகொள்ளவும், இந்த சந்திப்பை நடத்த நம் நண்பர்கள்  அனைவரும் பட்ட கஷ்டங்களை சொல்லில் சொன்னால் மட்டுமே மாளாது,
நீங்கள் ஒருமுறை அனுபவித்தால் மட்டுமே உங்களுக்கு புரியும் ஓரிடத்தில் நீங்கள் வெறும் பத்து பேரை ஒரு சின்ன சந்திப்புக்கு திரட்டி பாருங்கள், அப்போது தெரியும் கொஞ்சம் நஞ்சமல்ல நாக்கு தள்ளிவிடும்  
ஆனால் நம் நண்பர்கள் மெட்ராஸ் பவன் சிவா , ஆரூர் மூனா , அரசன், சீனு , செல்வின் , பிரபா , இன்னும் பெயர் தெரியாத நண்பர்களின் ஈடுபாட்டை நான் கடந்த ஒரு மாத காலமாக பார்த்து கொண்டுதானிருந்தேன் அதும் கடைசி இரு நாட்களில் அவர்கள் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்ததையும் நான் அருகில் இருந்து கவனித்தேன் அவர்கள் ஒரு குழு உணர்வோடு ஒரு வித அர்ப்பணிப்போடும் ஈடு பட்டதை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது ...
அவர்களுக்கு என்ன தேவை , அவர்களுக்கு இதிலென்ன லாபம் , அப்படி எல்லாம் கணக்கு பார்க்காமல் சந்திப்பை மிக சிறப்பாய் நடத்தி காட்டுவதிலேயே முனைப்பாக இருந்தார்கள் ..அதில்  வெற்றியும் பெற்று விட்டார்கள் (நன்றி என் நண்பர்களே ) அவர்களை பாராட்டி ஓரிரு வரிகள் கூட உங்களால் எழுத முடியவில்லையா என்ன ? அவர்கள் அருகில் இருந்து கவனித்து தானே இருப்பீர்கள் ..
அதை விடுங்கள் உணவு ஏற்பாடு பற்றி சொல்லவே இல்லை அது பிரமாதம் தானே .. அங்கே சாப்பிடும் நமக்கெல்லாம் குடிநீர் தந்த அக்காவிற்கு கூட ஒரு நன்றி சொல்லவில்லை நீங்கள் பெரிதாக குறை சொல்ல வந்து விட்டீர்கள் போங்க பாஸ்....

நீங்கள் சொல்லாமல் விட்ட குறையை நான் சொல்லவா நண்பா :
1.வடபழனி என்று சொன்னார்கள் நம்மை முருகன் கோவிலுக்கே கூட்டி போகவே இல்லை
2.மீட்டிங் நடந்த இடத்தில டிராபிக் ஓவர் இதனை விழாகுழுவினர் சரி செய்யவே இல்லை
3.அன்று பார்த்து வெயில் அதிகமாவே இருந்தது இதனை கூட திரு சூரிய பகவானிடம் விழா குழுவினர் முன்னமே எடுத்து சொல்லி அவரை ஆப் செய்து வைத்து இருக்கலாம் ஆனால் அவர்கள் செய்யவில்லை
4.பதிவர் சந்திப்பு நடந்த இடம் சென்னை வெகு தூரம்

இப்படி யாகபட்ட குறைகளை ஏன் நீங்கள் சொல்லவில்லை நண்பா கடுப்பு வருகிறது தானே எனக்கும் அப்படித்தான் உங்கள் பதிவினை படித்தபோது
 

மயிலன் நல்லதொரு கவிதையை வாசித்தார் அதை கைத்தட்டி ரசிக்ககூட ஆளில்லை...//
உண்மையில் மயிலன் கவிதைக்கு விழுந்த கைதட்டலின் ஓசையை நீங்கள் காதில் வாங்கி கொள்ளவில்லையென நினைக்கிறேன் ,

சந்திப்புக்கு வந்த அனைவரும் ஒத்துகொள்ளகூடிய இரண்டே குறை ஒன்று அரங்கம், மற்றொன்று போன வருடம் போல் அமரவைத்து உணவு பரி மாறி இருக்கலாம் என்பதே..அதை நம நண்பர்களிடத்தும் நாசூக்காய் சொல்லியும் விட்டார்கள் அதை அவர்களும் புன்னகையோடு ஏற்றுகொண்டார்கள் ....

நீங்கள் குறையன்று சொல்லும் விசயங்களை, உங்களை அவர்கள் ஆலோசனைக்கு அழைத்தபொது நீங்களும் சென்றிருந்து குறைகளே வராமல் உங்கள் ஆலோசனைகளை வழங்கி இருக்கலாமே? ஏன் செல்லவில்லை உங்கள் ஆலோசனையை சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் இப்படி ஒரு பதிவை உங்களால் போடவியலாது அல்லவா அதற்காகவே நீங்கள் போக வில்லையா

ஆட தெரியாதவன் தெரு கோணல் என்றானாம் என்ற பழமொழி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் முதலில் இப்படி பட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள் குறைகள் இருப்பின் அவர்களிடத்து சொல்லி இருக்கலாமே இதை ஒரு பதிவாக போட்டது உங்ககள் வியாபார உத்தியா? இது ஒரு வகையான மன நோய் நண்பரே.

தட்டி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குத்தி கிழிக்காதீர் நண்பா!! மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதிங்க அது உங்கமேலேயே பட்டுவிடும் கவனமாய் இருங்கள் ...இப்போதும் மட்டுமல்ல எப்போதும் குனிந்து எச்சில் துப்ப பழகி கொள்ளுங்கள்..

இது போலொரு பதிவை இனிமேல் தயவு செய்து எழுதாதீர்கள் ... அப்படி செய்வீர்களானால் உங்கள் முகத்தில் நீங்களே கரி பூசி கொண்டதாகிவிடும் .

நன்றி நண்பா


அன்புடன்
சசிமோகன் குமார் ...





11 comments:

தமிழ்சேட்டுபையன் said...

கவிதை வீதி சௌந்தரை விமர்சித்த தாங்கள் புது பதிவர் போல! இரண்டு பதிவுதான் போட்டிருக்கின்றீர்கள் இது நன்மையல்ல தம்பி.

இருந்தாலும் கடிதம் போல எழுதி தண்ணீர் கொடுத்த அக்கா என்று கூறியது உங்கள் எதார்த்தமான குணம் தெரிகின்றது.

திண்டுக்கல் தனபாலன் said...

அன்று அவருக்கு கண்ணும் காதும் சரியாக வேலை செய்யவில்லை... அதனால் தவறாக எண்ண வேண்டாம்...

தங்களின் புரிதலுக்கு நன்றி நண்பா...

Unknown said...

குறை சொல்வது எளிது செயல்படுத்துவது தான் கடினம்

செயல்படுவதே கடினம்\\\\\\

நன்றி

அஞ்சா சிங்கம் said...

முதல் பதிவே கலக்குதே ...... வாழ்த்துக்கள் ..........

Unknown said...

நீ நடத்து மச்சி ஒருபய வாய தொறக்ககூடாது அவ்வ்வ்வ் :-)

நாய் நக்ஸ் said...

நீயும் களத்துல குதிச்சிட்டியா???

Unknown said...

நீ நடத்து மச்சி இரவுவானம் எல்லாம் பாத்துக்குவான்..!

ஜோதிஜி said...

500 வது ஆளாக இணைத்துக் கொண்டாச்சு போல.

தேன் நிலா said...

பிளாக்கர் தளத்தில் பலரும் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் பிளாக்கரில் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழில் மறுமொழி (கருத்து)இட வசதிகள் இல்லை. தமிழ் மறுமொழிப்பெட்டி அமைப்பதன் மூலம் எளிமையாக தமிழில் கருத்திட முடியும்.

"தமிழ் மறுமொழிப் பெட்டி" அமைப்பது எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது இப்பதிவு. பிளாக்கர் தள வலைப்பதிவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். மேலதிக தகவல்களுக்கு சுட்டியைச் கீழுள்ள சொடுக்கி வாசிக்கவும்.
பிளாக்கர் தளத்தில் தமிழ் மறுமொழிப் பெட்டி அமைப்பது எப்படி?

அம்பாளடியாள் said...

சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்களும் இன்றைய வலைச்சர
அறிமுகத்திற்கு வாழ்த்துக்களும் சகோ.
http://blogintamil.blogspot.ch/2014/03/blog-post_12.html#comment-form

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்கள் பதிவைப் பார்த்தேன். பாராட்டுக்கள்.